செய்திகள் இந்தியா
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்: இந்திய அரசு முடிவு
புதுடெல்லி:
அவசரகால பயன்பாட்டுக்கான 4 மருந்துகளுக்கு மத்திய அரசு விலை உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது.
இதுபோல் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பி உள்ளிட்ட 37 மருந்துகளுக்கு சில்லறை விலை நிர்ணயம் செய்துள்ளது.
மூச்சுத்திணறல், இருமல், நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மார்பு இறுக்கம் போன்றவற்றை தடுக்க பயன்படுத்தும் இப்ராட்ரோபியம் (Ipratropium) உள்ளிட்ட மருந்துகள் அவசரகால பயன்பாட்டு மருந்துகளாக உள்ளன. இவற்றுக்கான விலை உச்சவரம்பு ஒரு மில்லிக்கு ரூ.2.96 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உயர் ரத்த அழுத்த அவசர சூழலில் ரத்த அழுத்தத்தை விரைவாக குறைக்கவும், அறுவை சிகிச்சையின்போது ரத்தப்போக்கை குறைக்கவும் கடுமையான இதய செயலிழப்பு நிகழ்வுகளிலும் ஊசி மருந்தான சோடியம் நைட்ரோபுரஸைடு (Sodium Nitroprusside) பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை உச்சவரம்பு ஒரு மில்லிக்கு ரூ.28.99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் டில்டியாசெம் (Diltiazem) ஒரு காப்ஸ்யூலுக்கு ரூ.26.77 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உச்சவரம்பு விலையை விட அதிக விலையில் (ஜிஎஸ்டியுடன் சேர்த்து) விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் உடனடியாக தங்கள் விலைகளை குறைக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
