
செய்திகள் இந்தியா
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்: இந்திய அரசு முடிவு
புதுடெல்லி:
அவசரகால பயன்பாட்டுக்கான 4 மருந்துகளுக்கு மத்திய அரசு விலை உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது.
இதுபோல் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பி உள்ளிட்ட 37 மருந்துகளுக்கு சில்லறை விலை நிர்ணயம் செய்துள்ளது.
மூச்சுத்திணறல், இருமல், நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மார்பு இறுக்கம் போன்றவற்றை தடுக்க பயன்படுத்தும் இப்ராட்ரோபியம் (Ipratropium) உள்ளிட்ட மருந்துகள் அவசரகால பயன்பாட்டு மருந்துகளாக உள்ளன. இவற்றுக்கான விலை உச்சவரம்பு ஒரு மில்லிக்கு ரூ.2.96 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உயர் ரத்த அழுத்த அவசர சூழலில் ரத்த அழுத்தத்தை விரைவாக குறைக்கவும், அறுவை சிகிச்சையின்போது ரத்தப்போக்கை குறைக்கவும் கடுமையான இதய செயலிழப்பு நிகழ்வுகளிலும் ஊசி மருந்தான சோடியம் நைட்ரோபுரஸைடு (Sodium Nitroprusside) பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை உச்சவரம்பு ஒரு மில்லிக்கு ரூ.28.99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் டில்டியாசெம் (Diltiazem) ஒரு காப்ஸ்யூலுக்கு ரூ.26.77 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உச்சவரம்பு விலையை விட அதிக விலையில் (ஜிஎஸ்டியுடன் சேர்த்து) விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் உடனடியாக தங்கள் விலைகளை குறைக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 5:36 pm
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
August 11, 2025, 4:56 pm
ட்ரம்ப் ஆட்சியில் 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்
August 9, 2025, 2:36 pm
தில்லியில் கனமழை: 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதம்
August 8, 2025, 5:26 pm
உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்
August 8, 2025, 5:07 pm
இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படாது: டொனால்ட் டிரம்ப்
August 8, 2025, 11:37 am
தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு: ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல் காந்தி
August 8, 2025, 10:51 am