நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்

புத்ராஜெயா:

சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.

சுக்மாவில் இருந்து இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் நீக்கப்பட்டதன் காரணத்தால் ஏற்பட்ட விவாதங்கள், அது தொடர்பான விளையாட்டாளர்களின் கவலை குறித்து நான் அறிகிறேன்.

இது குறித்து, நான் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர், மாண்புமிகு ஹன்னா இயோ, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் பின் ஷாரி ஆகிய இருவருடனும் இந்தப் பாரம்பரிய விளையாட்டின் அவசியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் கவலை தெரிவித்த பலரின் கருத்துக்களையும், வாதங்களையும் நான் அவ்விருவரிடமும் தெரிவித்தேன். 

மேலும் இந்த முடிவு மாற்றப்பட வேண்டும் என்றும் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், போட்டிகளில் இடம்பெற வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டை அவ்விருவரிடமும் விளக்கினேன். 

இந்தச் சர்ச்சை குறித்து இன்று அமைச்சரவைக் கூட்டத்திலும் நான் எனது நிலைப்பட்டை விவாதிப்பேன். 

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset