
செய்திகள் இந்தியா
தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு: ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல் காந்தி
புதுடெல்லி:
வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார். அதில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்து இருப்பதாகவும், ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதும், ஒரு வாக்காளருக்கு 4 வாக்குச்சாவடியில் ஓட்டு இருக்கும் ஆதாரத்தையும் ராகுல்காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இருப்பினும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னை குறித்து விவாதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 5:36 pm
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
August 11, 2025, 4:56 pm
ட்ரம்ப் ஆட்சியில் 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்
August 9, 2025, 2:36 pm
தில்லியில் கனமழை: 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதம்
August 9, 2025, 12:41 pm
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்: இந்திய அரசு முடிவு
August 8, 2025, 5:26 pm
உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்
August 8, 2025, 5:07 pm
இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படாது: டொனால்ட் டிரம்ப்
August 8, 2025, 10:51 am