செய்திகள் உலகம்
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் முக்கிய விவகாரங்களைப் பேச ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்: உள்துறை அமைச்சர் கா. சண்முகம்
சிங்கப்பூர்:
இந்தியச் சமூகத்தின் முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துபேச ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் அறிவித்தார்.
மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை, துணையமைச்சர் தினேஷ் வாசுதாஸ் இருவரும் ஒருங்கிணைப்புக் குழுவை வழிநடத்துவர். அரசாங்க ஊழியர்களோடும் மக்கள் கழகத்துடனும் அவர்கள் ஒன்றாகப் பணியாற்றுவர் என்று அமைச்சர் சண்முகம் கூறினார்
இந்தியச் சமுதாயத்தை இன்னும் எவ்வாறு ஒன்றிணைக்கலாம் என்பதே இந்தச் செயற்குழுவின் முக்கிய நோக்கம் என்று கூறினார் துணையமைச்சர் தினேஷ் வாசுதாஸ்.
நம் இந்தியச் சமுதாயத்தில் சிண்டா, நற்பணிப் பேரவைப் போன்ற பல குழுக்கள் இருக்கின்றன. இவை நல்ல பல செயல்களைச் செய்துவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தின் கருத்துகளைச் சேகரிப்பதில் ஒருங்கிணைப்புக் குழு கவனம் செலுத்தும். சமூகத்தை இன்னும் மேம்படுத்துவது எப்படி, எளிதில் பாதிக்கப்படுவோருக்கு உதவுவது எப்படி என்பதும் ஆராயப்படும் என்றார் அவர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
