
செய்திகள் மலேசியா
திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
திரெங்கானு, கிளந்தான் மாநிலங்களுக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
2023 முதல் 2025க்கும் இடையில் திரெங்கானுவிற்கு மொத்தம் 4 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கிளந்தானுக்கு 967 மில்லியன் ரிங்கிட் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி கிளந்தான், திரெங்கானு அரசாங்கங்களின் ஊதியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
குறிப்பாக வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஆகும். கூடுதலாக மாநில அரசாங்கத்தின் இரண்டாவது உறுதி மொழியின் கட்டணத்தைத் தீர்க்க உதவும்.
கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கான பெட்ரோலிய ராயல்டி கொடுப்பனவுகளின் நிலை குறித்து கேட்ட பெங்கலான் செப்பா நாடாளுமன்ற உறுப்பின அஹ்மத் மர்சுக் ஷாரி எழுப்பிய கேள்விக்கு பிரதமர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 2:58 pm
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறை தொடர்ந்து நலிந்து வருகிறது: காதிர் சுல்தான்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:53 am
தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்: பிரதமர்
August 5, 2025, 11:11 am
புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்
August 5, 2025, 11:10 am
பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி
August 5, 2025, 10:11 am
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்
August 5, 2025, 10:09 am
ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது
August 4, 2025, 11:05 pm