
செய்திகள் மலேசியா
கழிவு நீர் தொட்டி குழியில் விழுந்த 2 வயது சிறுவன் மரணம்
சிபு:
கழிவு நீர் தொட்டி குழியில் விழுந்த 2 வயது சிறுவன் மரணமடைந்தான்.
சரவா தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் இன்று மாலை ஜாலான் பெடாடாவில் நிகழ்ந்தது.
மாலை 6.29 மணிக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படை அதிகரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு வந்தவுடன், தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு சிறுவன் சம்பந்தப்பட்ட பாதைக்கு அருகில் உள்ள கழிவு நீர் குழியில் விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.
முன்னதாக பாதிக்கப்பட்டவரின் தந்தையும் தனது மகன் காணாமல் போனதாகவும்,
கழிவுநீர் தொட்டியில் உள்ள மேன்ஹோலில் விழுந்துவிட்டதாக நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆய்வு நடத்தி, மாலை 6.55 மணிக்கு பாதிக்கப்பட்டவரைத் தேடத் தொடங்கினர்.
மாலை 7 மணிக்கு சாக்கடையில் மிதந்த பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டனர்.
மீட்கப்பட்ட சிறுவனின் உடல் சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:53 am
தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்: பிரதமர்
August 5, 2025, 11:11 am
புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்
August 5, 2025, 11:10 am
பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி
August 5, 2025, 10:11 am
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்
August 5, 2025, 10:09 am
ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது
August 5, 2025, 10:09 am
திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்
August 4, 2025, 11:05 pm