நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி ஷாராவின் மரண வழக்கு விசாரணை ஆவணங்கள் அடுத்த வாரம் ஏஜிசியிடம் போலிசார் சமர்ப்பிக்க உள்ளனர்: சைபுடின்

கோலாலம்பூர்:

மாணவி ஷாராவின் மரணவழக்கு விசாரணை ஆவணங்கள் அடுத்த வாரம் ஏஜிசியிடம் போலிசார் சமர்ப்பிக்க உள்ளனர்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

முதலாம் படிவ மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையை போலிசார் முடித்து விட்டனர்.

விசாரணைக்கு உதவ சுமார் 60 சாட்சிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து விசாரணையும் முடிந்தது.

அடுத்த வாரத்திற்குள் போலிசார் விசாரணை ஆவணங்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு (ஏஜிசி) சமர்ப்பிப்பார்கள் என நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset