நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கார் 80% எரிந்து சாம்பலானது: தலைமை ஆசிரியர் மரணம்

குவாந்தான்:

விபத்தில் கார் 80% எரிந்து சாம்பலான சம்பவத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார்.

பெரா போலிஸ் தலைவர் சூல்கிஃப்லி நசீர் இதனை தெரிவித்தார்.

பெராவில் உள்ள குவாய் தேசியப் பள்ளி அருகே நேற்று பிரதான சாலையில் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் அவர் இறந்தார்.

ஜெராண்டுட் துரியன் ஹிஜாவில் தேசியப் பள்ளியில் பணியில் இருந்த 59 வயதான முகமட் சப்ரி பக்கர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

சப்ரி கம்போங் குவாயில் உள்ள தனது சகோதரரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் சறுக்கி விழுந்ததாகவும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset