செய்திகள் இந்தியா
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
புது டெல்லி:
சத்தீஸ்கரில் கேரளத்தைச் சேர்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் கைது செய்யப்பட்டனர். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வலதுசாரி ஹிந்து அமைப்புகளால் துன்புறுத்தப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தினார்.
தாங்கள் பின்பற்றும் மத நம்பிக்கைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அநீதி. பாஜக ஆர்எஸ்எஸ் ஆட்சியில் சிறுபான்மையினர் திட்டமிட்டு துன்புறுத்தப்படுகின்றனர் என்று ராகுல் கூறினார்.
மூன்று சிறுமிகளை கட்டாயமாக மதமாற்றம் செய்து, கடத்திச் செல்வதாக உள்ளூர் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் 2 கன்னியாஸ்திரிகள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
