நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி கடப்பிதழ் விவகாரம்; ஷுஹாய்லி தலைமைத்துவ செயல்திறனைக் காட்டத் தொடங்கி உள்ளது: சைபுடின்

கோலாலம்பூர்:

போலி கடப்பிதழ் விவகாரம் ஷுஹாய்லி தலைமைத்துவ செயல்திறனைக் காட்டத் தொடங்கி உள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தில் சுங்க, குடிநுழைவு தனிமைப்படுத்தல் வளாகத்தில் நேற்று பல அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து போலி கடப்பிதழ் விசாரணை குறித்த முழு அறிக்கைக்காக உள்துறை அமைச்சு காத்திருக்கிறது.

மேலும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஜைனுக்கு,

இந்த வழக்கை நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி கையாளுமாறு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

டத்தோஸ்ரீ ஷுயாய்லியிடம் இருந்து முழு அறிக்கையை பின்னர் கேட்பேன்.

இந்த துறைக்கு பதவியேற்று அவருக்கு இது 25ஆவது நாள் மட்டுமே.

முதலில் அவர் அதைக் கையாளட்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset