நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி, ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு மஇகா வெளியேற வேண்டிய அவசியம் இல்லை: ஜாஹித்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணி, ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு  மஇகா வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகாவுக்கு பங்கு வழங்கப்படாததால் தான் அதிருப்தி அடைந்ததாக அதன் தலைவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

இருந்தாலும் மஇகாவின் எதிர்காலம் அந்தக் கூறுகளுடன் மிகவும் பாதுகாப்பானது.

மேலும் இந்திய சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் கட்சியான மஇகா கூட்டணியிலிருந்தும் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்தும் வெளியேறக்கூடாது.

மஇகா ஒரு நல்ல அமைப்பைக் கொண்ட ஒரு கட்சி, இந்திய சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அது மிகவும் செல்வாக்கு மிக்கது.

இந்திய வாக்காளர்கள் மஇகாவை ஆதரிக்கத் திரும்பினால், அக்கட்சி நாடாளுமன்றம், சட்டமன்ற மட்டங்களில் அதிக பிரதிநிதிகளைப் பெறும் என்று நான் நம்புகிறேன்.

ஆக  தேசிய முன்னணி உடனான மஇகாவின் ஒத்துழைப்பு தொடர வேண்டும்

அம்னோ, மசீச,  மஇகா ஆகிய கட்சிகளின் இந்தப் பிணைப்பு பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset