
செய்திகள் மலேசியா
எதிர்க்கட்சியின் பேரணி மடானி அரசாங்கத்தின் ஜனநாயக முதிர்ச்சியை நிரூபித்துள்ளது: அடாம் அட்லி
கோலாலம்பூர்:
எதிர்க்கட்சியின் பேரணி மடானி அரசாங்கத்தின் ஜனநாயக முதிர்ச்சியை நிரூபித்துள்ளது.
கெஅடிலான் கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் அடாம் அட்லி இதனை கூறினார்.
தலைநகரில் நேற்று பாஸ் கட்சியின ஆதரவுடன் எதிர்க்கட்சி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி மடானி அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தின் முதிர்ச்சியின் அடையாளமாக மாறியது
மேலும் இந்தப் பேரணி வன்முறை அல்லது அதிகாரிகளின் குறுக்கீடு இல்லாமல் அமைதியாக நடைபெற்றது.
கடந்த காலங்களில் கருத்து சுதந்திரம் பெரும்பாலும் அடக்கப்பட்டு, கருத்து வேறுபாடுகள் குற்றமாக மாற்றப்பட்டது.
குரல்கள் நசுக்கப்பட்ட, கூட்டங்கள் தடுப்பட்ட, எதிர்ப்புகள் குற்றமாக்கப்பட்ட ஒரு காலகட்டத்தை மலேசியா கடந்து வந்துள்ளது.
ஆனால் நாட்டின் அரசியல் சூழல் கணிசமாக மாறிவிட்டது.
மடானி ஆட்சியில் எதிர்க்கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் தலைநகரில் எந்தவித இடையூறும் இல்லாமல், வன்முறையும் இல்லாமல் அமைதியாகக் கூட அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது நிர்வாகத்தின் பலவீனம் அல்ல, இது உண்மையான ஜனநாயகத்தின் பலம் என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 9:49 pm
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருங்கள்: ஹம்சாவுக்கு அன்வார் சவால்
July 27, 2025, 9:46 pm
போலி கடப்பிதழ் விவகாரம்; ஷுஹாய்லி தலைமைத்துவ செயல்திறனைக் காட்டத் தொடங்கி உள்ளது: சைபுடின்
July 27, 2025, 9:44 pm
1.99 ரிங்கிட்டில் பெட்ரோல் மலேசியருக்கானது; வெளிநாட்டினருக்கு அல்ல: பிரதமர்
July 27, 2025, 8:23 pm
தேசிய முன்னணி, ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு மஇகா வெளியேற வேண்டிய அவசியம் இல்லை: ஜாஹித்
July 27, 2025, 6:39 pm