நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு பேரணியை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள 16 வழித்தடங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்: போலிஸ்

கோலாலம்பூர்:

அன்வார் எதிர்ப்பு பேரணியைத் தொடர்ந்து கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள மொத்தம் 16 வழித்தடங்கள்  மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

அவ்வப்போது நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து இது மாறுபடும் என்று கோலாலம்பூர்  போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசுப் ஜான் முகமது கூறினார்.

பங்கேற்பாளர்கள் டத்தாரான் மெர்டேக்காவிற்குச் செல்வதற்கு முன்பு, தேசிய பள்ளிவாசல், பசார் செனி, மஸ்ஜித் ஜாமேக் சுல்தான் அப்துல் சமத், மஸ்ஜித் ஜாமேக் கம்போங் பாரு,  ஒரு பேரங்காடிஆகிய ஐந்து முக்கிய இடங்களில் பேரணி நடைபெற உள்ளது.

இது சம்பந்தமாக, சீரான போக்குவரத்தையும் அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய சூழ்நிலை தேவைப்பட்டால் பல வாகன மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset