
செய்திகள் மலேசியா
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
டாமன்சாரா:
முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இங்குள்ள புக்கிட் லெடாங்கில் உள்ள அவரது வீடு உடைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணியளவில் வீட்டுல் பணிப் பெண்ணிடம் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு அழைப்பு வந்தது.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கேட் வெட்டப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் அறைக்குள் திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜானைத் தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவத்தின் இழப்பு 1.8 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவரின் அறையில் நகைகள் தொலைந்து போனதும் அடங்கும்.
சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 3:12 pm
அழைப்பு இல்லாததால் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: பிரதமர் அன்வார்
July 26, 2025, 2:45 pm
எதிர்க்கட்சி பேரணி அமைதியாக இருக்க வேண்டும்: தக்கியூடின்
July 26, 2025, 1:06 pm
அன்வார் பதவி விலக வேண்டும் என்ற கோஷத்துடன் மக்கள் தலைநகரில் கூடி வருகின்றனர்
July 26, 2025, 1:03 pm
அன்வாருக்கு எதிரான பேரணி; உடனடி கர்ம வினையாகும்: டத்தோ டி. மோகன் சாடல்
July 26, 2025, 9:41 am
தாய்லாந்து – கம்போடியா மோதலைத் தீர்க்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான்
July 26, 2025, 9:31 am