நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்க்கட்சி பேரணி அமைதியாக இருக்க வேண்டும்:  தக்கியூடின் 

கோலாலம்பூர்:

எதிர்க்கட்சி பேரணி அமைதியாகவும் சீராகவும் இருக்க வேண்டும்.

பாஸ் கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை வலியுறுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என்ற அடிப்படையில் இன்றைய பேரணி பிரம்மாண்டமாக  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சியில் நடத்தும் பேரணி என்பதால் பங்கேற்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக பேரணி அமைதியாக நடைபெறுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

கோலாலம்பூரில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சி பேரணி எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக போலிசார் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.

ஆக பங்கேற்பாளர்கள் அனைவரும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset