நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுப்போக்குவரத்து நாளை வழக்கமாக செயல்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தகவல் 

கோலாலம்பூர்: 

TANAH MELAYU ரயில் சேவை, பிராசாரானா மலேசியாவின் கீழ் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என்று நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். 

நாளை வழக்கம் போல பொதுப்போக்குவரத்து சேவைகள் இருக்கும் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார். 

பேரணி நடத்தும் அடிப்படை ஜனநாயக உரிமையை மடானி அரசாங்கம் என்றும் தற்காக்கும் அதேவேளையில் அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்தோனி லோக் கேட்டுக்கொண்டார். 

வார இறுதி நாட்கள் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள். இதன் காரணமாகவே பொதுப்போக்குவரத்து செயல்படும். 

பேரணி ஒரு புறம் நடந்தாலும் அது பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களைப் பெரிதும் பாதிக்க செய்யாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset