
செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண செஸ் போட்டி இந்தியாவில் நடைபெறும்: சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு
புது டெல்லி:
உலகக் கிண்ண செஸ் போட்டி அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 27-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு, ஃபிடே அறிவித்துள்ளது.
இப்போட்டி நடைபெறும் நகரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஃபிடே கூறியுள்ளது.
இந்தத் தொடரில் 206 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026-ஆம்
ஆண்டு நடைபெறும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரரே, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடத் தகுதி பெறுவார்.
கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளர், தற்போது உலக சாம்பியனாக உள்ள இந்தியாவின் டி.குகேஷுடன் பலப்பரீட்சை நடத்துவார்.
உலகக் கிண்ண செஸ் தொடரை 23 வருடங்களுக்குப் பிறகு இந்தியா ஏற்று நடத்தவுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 8:59 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி வெற்றி
July 31, 2025, 8:55 am
அனைத்துலக ஜே லீக் போட்டியில் லிவர்பூல் வெற்றி
July 30, 2025, 8:35 am
ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் ரொனால்டோவுடன் இணைகிறார்
July 30, 2025, 8:34 am
ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்
July 29, 2025, 9:37 am
ரொனால்டோவுடன் மீண்டும் இணைய ஆண்டனி தயார்
July 29, 2025, 9:36 am
இந்தர்மியாமியில் இணைந்த அர்ஜெண்டினா ஆட்டக்காரர்
July 28, 2025, 9:18 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் பார்சிலோனா வெற்றி
July 28, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி
July 27, 2025, 8:47 am
கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் தோல்வி
July 26, 2025, 1:39 pm