நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்

லண்டன்:

ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மென்செஸ்டர் சிட்டியின் சாதனை நிர்வாகியாக பெப் குவார்டியாலோ விளங்கி வருகிறார்.

இந்நிலையில் அவ்வணியின் நிர்பாகியாக இருந்த காலம் தனது வாழ்க்கையை பாழாக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஏனெனில் அவர் முக்கிய கிண்ணங்களுக்காக போட்டியிடுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்.

கடந்த சீசனில் நான்கு லீக் பட்டங்களின் தொடர் தோல்வியில் முடிந்து.

இருந்தாலும் அடுத்த மாதம் தொடங்கும் பிரிமியர் லீக்கில் சிட்டியை மீண்டும் முதலிடத்திற்குக் கொண்டுவர அவர் தீவிரமாக உள்ளார்.

அதே வேளையில் அவரது நெருங்கிய நண்பர்களின் கூற்றுப்படி,

குவார்டியோலாவின் மனநிலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் எத்திஹாட்டில் அவரது ஒப்பந்தம் காலாவதியான பிறகு பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது திட்டங்களை அவர் அடிக்கடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எனக்கு 75 வயது போல் இருக்கிறது! என் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது, என் ஒவ்வொரு பகுதியும் இப்போது வலிக்கிறது என்று கூறினார்.

இதனிடையே எனக்கு உயிரியல் வயது சோதனை இருந்தால், முடிவுகள் இளமையாக இருந்திருக்கலாம்.

ஆனால் எனது தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால், இரவுகள் மிகவும் கடினமாகிவிடும்.

அன்றாட வழக்கம் மிகவும் வேதனையாகிவிடும்.

ஒரு பயிற்சியாளரின் வேலை, என்னுடையது மட்டுமல்ல. எனது சக ஊழியர்களும் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்  என்று குவார்டியோலா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset