நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்த பூட்டிய காரில் ஆடவர் சடலமாக மீட்பு 

ஜொகூர்
இயந்திரம் நிறுத்தப்படாமல் ஓடிக் கொண்டிருந்த பூட்டிய காரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஜொகூர் தாசேக் குளுகோரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, நேற்று இரவு 8.50 மணிக்கு காவல் துறையிடமிருந்து தகவல் பெற்ற பிறகு ஜொகூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தாசேக் குளுகோர் நிலையத்திலிருந்து ஒரு குழுவை அனுப்பியது.

சம்பவ இடத்துக்கு 9.03 மணிக்கு வந்த 7 பேர் கொண்ட குழு, சிறப்பு கருவிகளை பயன்படுத்தி பூட்டிய மாசடா CX-5 கார் கதவை திறந்தது என துறையின் உதவியாளர் இயக்குநர் ஜான் சாகுன் பிரான்ஸிஸ் தெரிவித்தார்.

அதில் ஓட்டுநர் இருக்கையில் ஓர் ஆண்ஔடல் அசைவின்றி கிடந்தார். பின்னர் மருத்துவ குழு அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தது.

மீட்பு பணிகள் இரவு 9.35 மணிக்கு முடிவடைந்தன. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset