
செய்திகள் மலேசியா
தேசிய பாதுகாப்பு, நீதிபதிகள் நியமனம் ஆகியவை ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவகாரங்களாகும்
கோலாலம்பூர்:
தேசிய பாதுகாப்பு, நீதிபதிகள் நியமனம் ஆகியவை ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.
ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் சையத் டேனியல் சையத் அகமது இதனை கூறினார்.
இன்று இஸ்தானா நெகாராவில் ஆட்சியாளர்கள் மன்றத்தின் 269ஆவது கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா தலைமை தாங்கினார்.
தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், நீதிபதிகள் நியமனம், வேப்பிங் தடை விதிக்கப்பதற்கான முன்மொழிவு ஆகியவை விவாதிக்கப்பட்ட விஷயங்களில் அடங்கும்.
மேலும் தேசிய பாதுகாப்பு குறித்த சமீபத்திய விளக்கத்தை போலிஸ் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயிலும், ஆயுதப்படைத் தளபதி முகமட் நிஜாம் ஜாஃபரும் வழங்கினர்.
குறிப்பாக கூட்டரசு நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதிபதிகள் நியமனம், சபா, சரவா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நாட்டின் தலைமை நீதிபதி ஆகியோரின் நியமனம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சையத் டேனியல் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 10:01 pm
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்
July 16, 2025, 10:00 pm
மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம்: பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm