
செய்திகள் மலேசியா
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
கோலாலம்பூர்:
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, நாடு முழுவதும் மொத்தமாக 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அஹமத் தெரிவித்தார்.
இல்லத்தரசிகளே குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன என அவர் தெரிவித்தார்.
சிலர் வன்முறைக்கு ஆளாகியும், அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கக்கூடும்.
சில நேரங்களில், கணவர்கள் 'ரிவர்ஸ் சைக்காலஜி' போன்ற உளவியல் முறைகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக உணரச் செய்கிறார்கள் என துணை அமைச்சர் நோரைனி அஹமத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் நெருக்கமான நபர்கள் அல்லது குடும்பத்தினரே, பெரும்பாலான குடும்ப வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என ஆய்வுகள் காட்டுகின்றன.
இன்று "Aku Wanita @ KRT" பெண்கள் நல விழிப்புணர்வு திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின் செய்தியாளர்களிடம் நோரைனி அஹமத் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 10:01 pm
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்
July 16, 2025, 10:00 pm
மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம்: பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:00 pm