செய்திகள் மலேசியா
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
கோலாலம்பூர்:
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு சுற்றுலா பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், பேருந்து முழுவதும் தீக்கிரையடைந்தது. பயணிகள் பேருந்தாக இருந்தும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 20.2 பகுதியில் உள்ள ஓய்விடத்தின் (R&R) அருகிலேயே காலை 8.14 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ கெம்பங்கான் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஏழு வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வண்டி அவசரமாக அழைக்கப்பட்டு, 8.25 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, குறுகிய நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சுற்றுலா பேருந்தின் பதிவு எண் CRR 9522 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பேருந்து 90 சதவிகிதம் வரை தீயில் அழிந்துவிட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அகமத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
தற்போது வரை எந்த உயிரிழப்பும், காயமும் ஏற்படவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 8:11 pm
நாளை முதல் ரோன் 97 பெட்ரோல் 5 சென்னும் ரோன் 95 பெட்ரோல் 10 சென்னும் உயரும்: நிதியமைச்சு
April 29, 2026, 8:09 pm
அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் விவகாரம் முழுமையாக ஆய்வு, கணக்கெடுப்புகள் தேவை: குணராஜ்
April 29, 2026, 8:07 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:29 pm
வறட்சியின் பிடியில் கோலோக் ஆறு: கிளாந்தானில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைவு
April 29, 2026, 5:19 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:04 pm
5 மாநிலங்களில் கைவரிசை காட்டிய 'லோன் ஷார்க்' கும்பல்: ஜொகூர் போலிசாரால் அதிரடியாக கைது
April 29, 2026, 4:46 pm
உறவினர்களிடமே கைவரிசையைக் காட்டிய ஆடவர்
April 29, 2026, 4:07 pm
நாட்டில் O, A ரத்த வகைகளின் விநியோகம் குறைந்து வருகிறது
April 29, 2026, 3:38 pm
