நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு

கோலாலம்பூர்:
நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்ட ஒரு வாகன மீட்பு முகவரின் அனுமதி, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அமைச்சால் (KPDN) ரத்து செய்யப்பட்டது.

இந்த சம்பவம், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS Expressway) பெடாஸ்-லிங்கி அருகே நடந்தது. அந்த முகவர் வண்டி மீட்பது போன்ற விடியோ  காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த முகவர் பதிவு செய்யப்பட்ட அனுமதியுடன் செயல்பட்டிருந்தாலும், ஒழுக்க நெறிமுறைகளை மீறியதனால் அவரது அனுமதி ரத்து செய்யப்படும் என அமைச்சகம் தெரிவித்தது. அவர் போலீசுடன் ஒத்துழைத்துள்ளதும் குறிப்பிடப்பட்டது.

மலேசியாவில் தற்போது 3,869 வாகன மீட்பு முகவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாடகை பெறும் சட்டம் 1967 (Hire-Purchase Act 1967 - Act 212) என்ற சட்டத்தின் கீழ் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

  1. வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழையக் கூடாது
  2. தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும்
  3. வாடிக்கையாளரின் தனிப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல நேரம் கொடுக்க வேண்டும்
  4. வாகனத்தின் நிலையை படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும்
  5. மீட்பு செய்த பிறகு 24 மணி நேரத்துக்குள் போலீசில் புகார் கொடுக்க வேண்டும்
  6. அச்சுறுத்தல், வன்முறைக்கு இடமில்லை


மீட்பு பணியின் போது வன்முறை, அச்சுறுத்தல் போன்றவை கடுமையாகக் கண்டிக்கப்படுகின்றன. இது அனுமதி ரத்துக்கும், சட்ட நடவடிக்கைக்கும் காரணமாகும்.

2022 முதல் 2025 ஜூன் 25 வரை 762 மீட்பு முகவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் 27 புகார்கள் கிடைத்துள்ளன.


மீட்பு முகவர்கள் விதிமுறைகளை மீறினால், அல்லது தவறான முறையில் நடந்து கொண்டால், கீழ்க்காணும் வழிகளில் புகார் அளிக்கலாம்:

WhatsApp – 019-848 8000
இணையம் – eaduan.kpdn.gov.my
அழைப்பு மையம் – 1-800-886-800
Ez ADU KPDN செயலி வழியாகவும் புகார் அளிக்கலாம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset