
செய்திகள் மலேசியா
நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வரும் இரண்டு வங்கதேச ஆடவர்கள் கைது
புத்ராஜெயா:
நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் இரண்டு வங்கதேச ஆடவர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்தின் இயக்குனர் உட்பட இரண்டு பேர் இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்ஏசிசி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 50 வயதுடைய இருவரும், நெகிரி செம்பிலான், தலைநகரைச் சுற்றி நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை கைது செய்யப்பட்டனர்.
கேஎல்ஐஏ முனையம் 1இல் அமலாக்க அதிகாரிகளுக்கு இவர்கள் கையூட்டு கொடுத்ததாக ஆரம்ப விசாரணைகள் கூறுகின்றன.
வெளிநாட்டினர் நுழையும்போது அவர்களைச் சரிபார்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள கேஎல்ஐஏ 1இல் உள்ள அமலாக்க அதிகாரிகளை அணுகுவதே இவர்களின் செயல்பாடாகும்.
கைதான இருவர் ஜூலை 20ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்படுவதாக புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூத்த பதிவாளர் ஷேக் ஜூலாட்ரூஸ் உத்தரவைப் பிறப்பித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm
269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம்: சிலாங்கூர் சுல்தான் தலைமை தாங்குகிறார்
July 16, 2025, 3:57 pm
திருமண முகாமில் நிர்வாண நிகழ்ச்சி: காவல் துறை உறுதிப்படுத்தியது
July 16, 2025, 3:42 pm
அலுவலக உதவியாளர் RM1.26 லட்சம் இழந்த மோசடி!
July 16, 2025, 3:33 pm