நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 கடல்சார் சட்டங்களைப் போக்குவரத்து அமைச்சு மறுஆய்வு செய்யும்: அந்தோனி லோக்

பெட்டாலிங் ஜெயா:

நாட்டின் ஆறு கடல்சார் சட்டங்களை போக்குவரத்து அமைச்சகம் (MOT) மறுஆய்வு செய்து வருவதை அதன் அமைச்சர் அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார்.

அவை தற்போதைய சூழலுக்கு இனி பொருந்தாது என்று கருதப்படுவதால் இந்த மறுஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார். 

Ordinan Perkapalan Saudagar (MSO) 1952, Sarawak MSO, Sabah MSO, Akta Penswastaan Pelabuhan 1990, Akta Suruhanjaya Pelabuhan Pulau Pinang 1955, Akta Pihak Berkuasa Pelabuhan 1963 ஆகிய ஆறு சட்டங்கள் தற்போது மறுஆய்வு செய்யப்படுகிறது. 

நாட்டின் கடல்சார் தொழில் மிகவும் போட்டித்தன்மையுடனும், துடிப்புடனும் இருப்பதை உறுதி செய்வதே இந்த மறுஆய்வு நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

இந்தச் சட்டங்களில் பல நீண்ட காலமாகத் திருத்தப்படாத பழைய சட்டங்கள்.

இனி பொருந்தாத அல்லது தற்போதைய முன்னேற்றங்களைப் பின்பற்றாத பல விஷயங்கள் இருக்கலாம் என்று அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டு மலேசிய கடல்சார் வாரத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset