நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் இறுதி மூச்சு வரை மலேசியாவை நேசிப்பேன்: துன் மகாதீர்

புத்ரா ஜெயா:

என் இறுதி மூச்சு வரை மலேசியாவை நேசிப்பேன் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெற்றாலும் நாட்டில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வு குறித்துத் தாம் கவலைப்படுவதற்கு இதுவே காரணம் என்று அவர் குறிப்பிட்டார். 

வயதான காலத்தில் எதற்காக இன்னும் நாட்டின் அரசியல் நிலை குறித்துக் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று பலர் கேட்டனர். 

அவர்கள் சொல்வது போது வயதாகியிருக்கலாம். ஆனால் நாட்டின் குடிமகனாகஹ் தாய்நாட்டைப் பற்றி தொடர்ந்து அக்கறை கொள்ள தனக்கு வலுவான காரணங்கள் இருப்பதாகத் துன் ம்காதீர் கூறினார். 

இது தன்னுடைய நாடு என்றும் இங்குத்தான் தாம் பிறந்து வளர்ந்து வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் துன் ம்காதீர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

தனக்கு வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்த நாட்டைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது மிகவும் கடினமானது எனறும் அவ்வாறு இருப்பது பொறுப்பற்றது என்று அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset