
செய்திகள் மலேசியா
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்தனர்
உலு லங்காட்:
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்தனர்.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.
உலு சிலாங்கூர் புக்கிட் செந்தோசா ஜாலான் துலிப் 3இல் இந்த விபத்து நிகழ்ந்தது.
காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 38 வயது பெண்ணும் அவரது ஒன்பது வயது மகளும் காயமடைந்தனர்.
அவசர அழைப்பு வந்தவுடன் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து எட்டு பேர் கொண்ட குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தது.
விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் லேசான காயமடைந்தனர்.
அதே நேரத்தில் 57 வயது பேருந்து ஓட்டுநர், 17 வயது சிறுவன் ஒருவருக்கு காயம் ஏற்படவில்லை.
காயமடைந்தவர்கள் கோலா குபு பாரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 12:26 am
சிகாம்புட் தொகுதி இந்தியர்களுக்கு மஇகா உரிய சேவைகளை வழங்கும்: டத்தோ சிவக்குமார்
July 14, 2025, 6:14 pm
நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பேரணி வெற்றி: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அறிவிப்பு
July 14, 2025, 6:00 pm
நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கவே பேரணியில் கலந்து கொண்டேன்: நூருல் இசா
July 14, 2025, 5:45 pm
மன்னிப்பு கேட்ட மகாதீர்: பிறந்தநாள் பிக்னிக்கில் உடல்நலக்குறைவு
July 14, 2025, 5:41 pm
லோரிக்குள் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்: காரில் பயணித்தவருக்கு கால் முறிந்தது
July 14, 2025, 5:33 pm
கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற லாரியின் காணொலி வைரல்
July 14, 2025, 5:29 pm
குறைந்த கட்டணச் சேவையே கேடிஎம் லாபம் ஈட்டாததற்குக் காரணம்: அந்தோனி லோக்
July 14, 2025, 3:12 pm
வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்
July 14, 2025, 3:11 pm