நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானியத் தொகை குறைக்கப்பட்டாலும் முட்டை விநியோகம் சீராகவுள்ளது: மாட் சாபு

கோலாலம்பூர்:

மே 1-ஆம் தேதி முதல் முட்டைகளுக்கான மானியத் தொகை குறைக்கப்பட்டாலும் சந்தையில் அதன் விநியோகம் சீராக இருப்பதாக விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்தார். 

சந்தையில் கோழி முட்டைகளின் விநியோகம் நிலையானதாகவும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் போதுமானதாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

மானியத் தொகை குறைக்கப்பட்டது கோழி முட்டை விநியோகத்தைப் பாதிக்கவில்லை.

இது உள்ளூர் உற்பத்தியின் நிலைத்தன்மையைக் காட்டுகிறது என்று முஹம்மத் சாபு தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோழி முட்டைகளுக்கான மானியத் தொகை ஒரு முட்டைக்கு 10 சென்னில் இருந்து ஐந்து சென்னாகக் குறைக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்த மானியத் தொகை முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset