நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் புத்ராஜெயாவில் பேரணி தொடங்கியது

புத்ராஜெயா:

நாட்டில் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் புத்ராஜெயாவில் பேரணியை நடத்துகிறது.

வழக்கறிஞர்கள், அரசு சாரா இயக்க உறுப்பினர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் என நம்பப்படும் குழு, மதியம் 12.30 மணியளவில் இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் முன் ஒன்றுகூட தொடங்கினர்.

2 மணிக்கு மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் பிரதிநிதிகள் பேசத் தொடங்கினர்.

சரியாக பிற்பகல் 2.30 மணிக்கு புத்ராஜெயாவின் கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  பிரதமர் அலுவலகம்  நோக்கி அவர்கள் நடந்து செல்ல ஆரம்பித்தனர்.

நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான பேரணியில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வழி நெடுக நீதித்துறைக்கு சுதந்திர வேண்டுமென அவர்கள் முழங்கிக் கொண்டு நடந்து செல்கின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன் & படம்: மஹாதீர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset