
செய்திகள் இந்தியா
நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர்
புது டெல்லி:
நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம் உள்பட இந்திய சிறுபான்மையினரின் வாக்குகளை பாஜக நீக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பிஹார் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டுவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிஹாரில் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரியிலும் இதுபோன்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm