செய்திகள் இந்தியா
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது டெல்லி:
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்துயும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா உள்பட 5 யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வர்த்தக ரீதியில் தெரிவிக்கப்படும் கருத்துகள் கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், நகைச்சுவை என்பது வாழ்வின் ஓர் பகுதி. ஆனால், அது மற்றவர்களை ஏளனம் செய்வதாக இருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நகைச்சுவைகளை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வணிக ரீதியிலான இதுபோன்ற பேச்சுக்கள், அடிப்படை பேச்சுரிமையின் கீழ் வராது.
இந்தச் செயலுக்காக 5 யூடியூபர்களும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டு, அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சியில் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
