நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“ரகன் KKM” திட்டத்தை  தனியார் அமைப்புகள் முன்னெடுக்கவில்லை : சுகாதார அமைச்சர் விளக்கம்

புத்ராஜெயா, 
"ரகன் KKM" எனப்படும் புதிய திட்டம், அரசு முன்னெடுக்கவிருக்கும் இருக்கும் ஒரு பொது நல திட்டம்தான் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுள்கிப்லி அஹமத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அது தனியார் சுகாதார சேவை நிறுவனங்களுக்கு வழிவகுக்கும் திட்டமல்ல என்றும், இது தற்போதைய அரசு சுகாதார திட்டங்களை முன்னெடுக்க உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து  தனது X பதிவில், “தலைப்புகளை மட்டும் வாசித்து சந்தேகப்படும் நேரத்தில், தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரகன் KKM Sdn Bhd, மத்திய நிதி அமைச்சர் நிறுவனத்தின் (MoF Inc) கீழ் உள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

எதிர்காலத்தில் GLICs (அரசு தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள்) பங்குதாரர்களாக இணைந்தாலும்,
இதன் செயல்படுகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடரும் என உறுதியளித்தார்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset