செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தாப்பா:
ஆயிர் கூனிங் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தாப்பா ஆயிர் கூனிங் தேவிஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நீண்டக் கால வரலாற்றை கொண்ட ஆலயமாகும்.
இவ்வாலயத்தில் திருப்பணிகள் வெற்றிகரமாக நடந்து இன்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின் புனித கும்ப நீா் ஆலய கலசங்களுக்கு ஏற்றப்பட்டது.
இதில் திரளான மெய்யன்பர்கள் கலந்துக் கொண்டு சுவாமியின் திருவருட்கடாட்சம் பெற்றனர்.
குறிப்பாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
ஆலய கும்பாபிஷேகத்திற்கு பின் அங்கு கூடியிருந்த மக்களையும் அவர் சந்தித்து பேசினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
