நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாசேக் குளுகோரில் உள்ள 3 பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: சைரா பானு

தாசேக் குளுகோர்:

தாசேக் குளுகோரில் உள்ள 3 பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பினாங்கு கால்நடை சேவைகள் துறை இயக்குனர் சைரா பானு முஹம்மது ரெஜாப் இதனை கூறினார்.

வடக்கு மண்டல கால்நடை ஆய்வகத்தின் ஆய்வக சோதனை முடிவுகளின் அடிப்படையில்,

கம்போங் செலாமாட்டில் உள்ள மூன்று பன்றிப் பண்ணைகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு பண்ணைகள் அதிக கால்நடை இறப்பு விகிதங்களைக் காட்டியுள்ளன.

இது அருகிலுள்ள பகுதியில் உள்ள பிற பண்ணைகளுக்கும் நோய் பரவும் சாத்தியம் குறித்த கவலைகளை எழுப்புகிறது.

பன்றிக் காய்ச்சல் பரவுவதை உடனடியாக  கட்டுப்படுத்த வேண்டும்.

இதனால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, நெருக்கமான கண்காணிப்பையும் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset