
செய்திகள் மலேசியா
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
சிங்கப்பூர்:
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சாங்கி விமான நிலையத்திலும் கரையோரப் பூந்தோட்டத்திலும் பிடிபட்டதாக சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
தகுந்த உரிமம் வைத்திருக்காத ஓட்டுநர்களுக்கு 3,000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதமோ 6 மாதச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இந்நிலையில் பயணிகள் சட்டவிரோத வாகனச் சேவையைப் பயன்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தகைய சேவைகளை வழங்குவோர் தகுந்த உரிமமோ காப்புறுதியோ வைத்திருக்கமாட்டார்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 4:33 pm
சுங்கை சிப்புட் பள்ளிவாசலில் சமய நல்லிணக்கத்துடன் ஆஷூரா கஞ்சி வழங்கப்பட்டது
July 13, 2025, 4:23 pm
துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am