நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை  நாம் நேசிக்கப் பழக வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

எஸ்கே சாய் மண்டபம் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய கலை கலாச்சார விருது விழா 2025 மிக சிறப்பாக நடைபெற்றது. 

இந்த சிறப்பான நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

நம்முடைய கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தைக் காப்பாற்றும் இந்த முயற்சி போற்றத்தக்கது. 

தாளக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்களும், கலைஞர்களே. தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம். 

உறுமி மற்றும் நாதஸ்வர மேள தாளக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் யாசி விருது விழாவில் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset