
செய்திகள் இந்தியா
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
தாணே:
மஹாராஷ்டிராவின் தாணே மாவட்ட பள்ளியில் மாணவிகளை ஆடைகளை களைந்து சோதனையிட்டதாக பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சஹாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி கழிப்பறையில், கடந்த 8ம் தேதி ஆங்காங்கே ரத்தத் துளிகள் தென்பட்டன.
இதைஅறிந்த பள்ளி முதல்வர், ஐந்து முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியரை பள்ளி கூட்டரங்கத்துக்கு அழைத்தார்.
கழிப்பறையில் தென்பட்ட ரத்த துளிகளை, வீடியோ எடுத்து, மாணவியருக்கு போட்டு காட்டியுள்ளார். மேலும், மாதவிடாய் உள்ளவர்களை சோதனையிட பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவியரை கழிப்பறைக்கு அழைத்து சென்ற பெண் உதவியாளர், ஆடைகளை மற்றும் உள்ளாடைகளை அவிழ்த்து சோதனையிட்டார்.
இது குறித்து பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் டுபட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளி முதல்வர், நான்கு ஆசிரியைகள், உதவியாளர் உட்பட எட்டு பேர் மீது, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பள்ளி முதல்வர், பெண் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm