நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: 

கடந்த ஓரு வாரமாக 5 நாடுகளுக்கு பயணத்தை முடித்துவிட்டு தில்லி திரும்பிய மோடிக்கு உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு எப்போது செல்லார் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக சமூக வலை தளத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஸ் வெளியிட்ட பதிவில்,
அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பல்வேறு வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பி உள்ளார். அவரை இந்தியா வரவேற்கிறது.

கலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மாநிலம், கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியிருக்கும் அவர் இப்போதாவது சிறிது நேரம் ஒதுக்கி மணிப்பூர் செல்வாரா?

பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் இயற்கை சீற்றத்தால் சீர்குலைந்திருக்கிறது.

இமாச்சல பிரதேசம் பெருவெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களின் நிவாரணப் பணிகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்துவாரா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset