
செய்திகள் மலேசியா
ஹெலிகாப்டர் விபத்து: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மொஸ்டி உறுதி
கோலாலம்பூர்:
அரச மலேசியப் போலீஸ்படையின் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணைக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு, மொஸ்டி முழு ஒத்தழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
நேற்று அரச மலேசியப் போலீஸ்படைக்குச் சொந்தமான ஏஎஸ்355-என் ரக ஹெலிகாப்டர் சுங்கை பூலாய் நீர்ப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் விபத்து தொடர்பாக நடத்தப்படும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும் பாதுகாப்பின் அனைத்து அம்சங்களும் முழுமையாக ஆராயப்படுவதை உறுதி செய்வதற்கும் மொஸ்டி உறுதி பூண்டுள்ளது என்று அந்த அமைச்சு தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை செயல்முறைக்கு எதிரான எந்தவொரு ஊகத்தையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியதுடன், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைத்துth தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm