நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் வழக்கறிஞர்கள் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: ரபிசி

கோலாலம்பூர்:.

புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் வழக்கறிஞர்கள் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்.

முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

புத்ராஜெயாவில் மலேசிய வழக்கறிஞர் சங்கம் அமைதியான பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இந்த பேரணியில் நான் பங்கேற்கவில்லை.

அதே பிரச்சினைகள்  முன்னுரிமைகளை உள்ளடக்கியிருந்தாலும் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.

நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய முடிவாகும்.

இருந்தாலும் நானும் மற்ற கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்புற தலையீட்டிற்கு உட்பட்டவர்கள் அல்ல என்று அவர் கூறினார்.

வழக்கறிஞர் சங்கம் அதை வரவேற்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

இது அவர்களின் விவகாரங்களில் அரசியல் தலையீடாகவும் பார்க்கப்படலாம்.

எனவே, நான் இப்போதைக்கு அந்த அணிவகுப்பில் சேர திட்டமிடவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset