நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தோட்டப் பாட்டாளி மக்களுக்கு எதிரான சமூக அநீதிக்கு தீர்வு பிறந்துள்ளது: துணையமைச்சர் சரஸ்வதி

புத்ராஜெயா:

ஏழை எளிய, குறைந்த வருமானம் பெறக் கூடிய தோட்டத் தொழிலாளி மக்களுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்க பெறும் மாபெரும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.

மத்திய, மாநில அரசு மக்களுக்கு உதவிகளை ஒருங்கிணைகும் e-kasih தரவு தளத்தில் தோட்டப் பாட்டாளி மக்கள் பதிவு செய்து கொள்வது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மறுக்கப்பட்டு வந்துள்ளது. 

மலேசியாவை செழிப்பான நாடாக உருவெடுக்கச் செய்ததில் தோட்டப் புறங்களில் வாழ்ந்துவரும் இந்திய பாட்டாளி மக்களுக்கு பெரும் பங்கு உண்டு. 

ஆனால், அரசு உதவிகளை பெறும் விவகாரத்தில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டது சமூக அநீதியாகவே கருதப்படுகிறது. 

இதனை தொடர்ந்து, பிரதமர் துறையின் கீழ் இயங்கும் e-kasih தரவு தளத்திற்கு பொறுப்பேற்க கூடிய  ஐசியூ பிரிவுடன் கலந்து பேசி இப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் தலைவர்கள் கிராமங்களை தத்தெடுக்கும் Santuni Madani எனும் திட்டத்தை 
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புக்கிட் தாகார், மேரி ஆகிய தோட்டங்களை தாம் தத்தெடுத்ததாக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். 

அவ்விரு தோட்டங்களை சேர்ந்த மக்கள் e-kasih தரவு தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

தாம் தத்தெடுத்த தோட்டங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள தோட்ட மக்களும் e-kasih-வில் தங்களை பதிவு செய்துக் கொள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடனும் தாம் கலந்து பேசியதாக அவர் சொன்னார். 

அச்சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக கூறியுள்ளார்.

மேலும், இதன் தொடர்பில் தோட்டத் துறை மூலப் பொருள் அமைச்சுக்கும் தாம் கடிதம் அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார். அமைச்சிடம் இருந்தும் தமக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது.

ஆனால் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது. 

தோட்ட மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க அச்சங்கத்தினரை மூன்று முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை. 

இருந்தாலும், நாடு முழுவதும் உள்ள தோட்ட பாட்டாளி மக்களின் நல்வாழ்விற்காகவும் அவர்களின் சுமைகளை குறைப்பதற்காகவும் தாம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset