செய்திகள் மலேசியா
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை என அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் திட்டவட்டமாக கூறினார்.
மடானி அரசாங்கத்தில் இரு அமைச்சர்கள் விலகி விட்டனர்.
இதனால் விரைவில் நடக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் மஇகாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி வேண்டாம். கால தாமதமாகி விட்டது. இனியும் அமைச்சர் பதவியை ஏற்பது அர்த்தமற்றது.
மேலும் நாங்கள் இப்போது தான் நிம்மதியாக உள்ளோம். யாரும் எங்களை திட்டுவதில்லை.
யார் தகுதியானவர்களோ அவர்களுக்கு அப்பதவியை அரசு கொடுக்கட்டும் என்று அவர் கூறினார்.
13ஆவது மலேசியத் திட்டத்திற்கு பல பரிந்துரைகளை மஇகா வழங்கியுள்ளது.
இந்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என மஇகா நம்புகிறது.
மேலும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பல தரப்பினரிடம் இருந்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.
யார் வேண்டுமானாலும் பரிந்துரைகளை கொடுக்கட்டும். ஆனால் அது அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?.
குறிப்பாக அப்பரிந்துரைகள் அமல்படுத்தப்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், நூருல் இசா விவகாரத்தில் கூறியதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மஇகா பல நடவடிக்கைகளை அமைதியாக மேற்கொண்டது.
ஆனால் மஇகா ஒன்ருமே செய்யவில்லை என குற்றம் சாட்டினர்.
அந்நிலை நூருல் இசாவுக்கு வரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு கூறினார்.
ஆக இந்த விவகாரத்தை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.மேலும்
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
