செய்திகள் மலேசியா
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
புத்ரா ஜெயா:
பாலி நீரிணையில் கடந்த புதன்கிழமை இரவு பயணிகள் ஃபெரி மூழ்கிய சம்பவத்தில் விபத்தில் ஒரு மலேசியர் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுவதாக வெளியுறவு அமைச்சு, விஸ்மா புத்ரா கூறியது.
ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சகம், அமைச்சகத்தின் தூதரகத் துறை மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து இது குறித்த கூடுதல் தகவலை பெறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளை விஸ்மா புத்ரா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
12 பணியாளர்கள், 53 பயணிகள் மற்றும் 22 வாகனங்களை ஏற்றிச் சென்ற KMP Tunu Pratama Jaya என்ற ஃபெரி புதன்கிழமை இரவு பாலி நீரிணையில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 10:34 am
சுக் நெடுஞ்சாலையில் டோல் சாவடியை லோரி மோதியதில் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்
May 1, 2026, 10:16 am
மனிதாபிமானப் பணியில் முட்டுக்கட்டை: காசா உதவிக்கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்
April 30, 2026, 11:44 pm
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
April 30, 2026, 11:42 pm
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 6:09 pm
