நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதுடன் எரிசக்தி மாற்றத்தில் மலேசியா, இத்தாலி கவனம் செலுத்தும்: பிரதமர்

ரோம்:

பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதுடன் எரிசக்தி மாற்றத்தில் மலேசியா, இத்தாலி கவனம் செலுத்தும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியாவும் இத்தாலியும் தங்கள் நீண்டகால பொருளாதார உறவுகளை மேம்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

மேலும் எரிசக்தி மாற்றத்தில் கவனம் செலுத்துகின்றன.

இது ஜப்பான், இந்தோனேசியாவின் ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் ஆசியான் வட்டாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கக்கூடிய ஆற்றலைக் கொண்ட ஒரு எரிசக்தி மாற்றத் திட்டத்தை செயல்படுத்த முன்னணி இத்தாலிய எரிசக்தி நிறுவனங்களான இஎன்ஐ, பெட்ரோனாஸ் ஆகியவை தங்கள் நிபுணத்துவத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து வருகின்றன.

இஎன்ஐ,  பெட்ரோனாஸ் இந்த நடவடிக்கையைத் தொடங்கியபோது,   ஜப்பானியப் பிரதமர் இந்த முயற்சியில் பங்கேற்க தனது நாட்டின் ஆர்வத்தைத் தெரிவிக்க என்னைத் தொடர்பு கொண்டார்.

இன்று மலேசியா-இத்தாலி பொருளாதார கூட்டாண்மை வட்டமேசை மாநாட்டு அமர்வில் பிரதம இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset