நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு

கவுஹாத்தி: 

அசாம் மாநிலம் கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) சமீபத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

2025-ம் ஆண்டில் இதுவரை, இந்த மருத்துவமனையில் 44 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து பேசிய கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் அச்சுத் சந்திர பைஷ்யா, “கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக, ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகியுள்ளது. 

இதுவரை, எங்கள் மருத்துவமனையில் 44 பேருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது, இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44 பேரில் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், நல்பாரியை சேர்ந்த 10 பேர், தர்ரங்கை சேர்ந்த 7 பேர் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர்” என்றார். 

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2015 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அசாமில் 840-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset