நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பலட் திட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: ஹம்சா ஜைனுடின்

கோலாலம்பூர்:

சர்ச்சைக்குரிய அம்பலட் திட்டம் தொ டர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

எதிர்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டணி துணைத் தலைவருமான்ன டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.

எண்ணெய், எரிவாயுவை ஆராய்வதற்கான இந்தோனேசியாவுடன் புத்ராஜெயாவின் கூட்டுத் திட்டம் தான் அம்பலட் திட்டமாகும்.

அரசாங்கம் இதுபோன்ற அவசர முடிவை எடுக்க வேண்டாம். குறிப்பாக அண்டை நாடு மலேசியாவின் கடல்சார் பகுதிக்கு உரிமை கோரும் போது முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.

மலேசியாவின் இறையாண்மை, நலன்கள் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும், குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் நிறைந்த அம்பலட் தொகுதியில் உள்ள மூலோபாய கடல்சார் பகுதியில், உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டின் கடல்சார் இறையாண்மை வெளிநாடுகளால் கோரப்படும்போது, ​​அவசரமாக கூட்டு வளர்ச்சியை மேற்கொள்ளும் நடவடிக்கை, தேசிய நலன்களை முடக்கிவிடும்.

இது சம்பந்தமாக, அம்பாலட்டில் கூட்டு மேம்பாடு,  சுலவேசி ஒப்பந்த ஆவணம் குறித்த விவரங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset