நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இடைக்கால  இயக்குநராக ஃபடில் மர்சுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூர்: 

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இடைக்கால இயக்குநராக ஃபடில் மர்சுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரின் இந்த பதவிக்காலம் நாளை ஜூலை 1ஆம் தேதி செவ்வாய்கிழமை நடப்புக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

புக்கிட் அமானின் JSJ துறை இயக்குநராக இருந்த முஹம்மத் சுஹைலி முஹம்மத் சைன் மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுப்பு அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த இடைக்கால இயக்குநர் பொறுப்புக்கு வருகிறார். 

பதவி ஒப்படைப்பு, பதவி நியமன சடங்குகள் யாவும் நாளை புக்கிட் அமானில் நடைபெறவுள்ளது.

இந்த பதவி ஒப்படைப்பு நிகழ்ச்சியை அரச மலேசிய காவல்படை தலைவர் முஹம்மத் காலிட் இஸ்மாயில் பார்வையிடவுள்ளார். 

மலேசிய எல்லை, பாதுக்காப்பு அமைப்பின் இயக்குநராக சுஹைலி நியமிக்கப்பட்டதற்கு ஐ.ஜி.பி காலிட் இஸ்மாயில் PDRM போலீஸுக்கு நன்றியைத் தெரிவித்து கொண்டார். 

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset