
செய்திகள் இந்தியா
உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபம் செய்த யாதவ இனத்தவர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்யும் முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டனர். முகுட்மணியின் தலைமுடியை மொட்டையடித்த உயர் சாதிவெறி கும்பலை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிராமணர் அல்லாத முகுட்மணி கதாகாலட்சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடந்துள்ளது. இதை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்டித்துள்ளனர்.
இதற்கிடையில், முகுட்மணி மீது பாலியல், பிராமணர் என பொய் கூறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து உ.பி.யின் மற்றொரு பிரபல கதாகாலட்சேபகர் லவ்லி சாஸ்திரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகுட்மணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் யாதவ சமூகத்தினர் அனைவருக்கும் அவமானம். யாதவர்களில் கதாகாலட்சேபகர்கள் அதிகமாகிவிட்டதால், பிராமணர்களுக்கு கோபம் வருகிறது. யாதவர்களால் வாழ்நாள் முழுவதும் வணங்கப்பட்டவர்கள் இப்போது அவர்களைத் தாக்குகிறார்கள்.
வீடு கட்ட பூசை, திருமண சடங்குகள் என அனைத்துக்குமே பிராமணர்களை அழைக்கிறோம். யாதவர்களால் தம் சமூக மக்களின் திருமணங்கள், மத சடங்குகளை தானே நடத்த முடியாதது ஏன்? யாதவர்கள் இப்போதே ஒன்றுபட வேண்டும். இவ்வாறு லவ்லி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்நிலையில், முகுட்மணியை சமாஜ்வாதி கட்சி தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சால்வை போர்த்தி மரியாதை செய்துள்ளார் அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்.
அகிலேஷ் கூறுகையில், ‘‘சமூக ஆக்கிரமிப்பாளர்கள் இதர சமூகத்தின் கலைஞர்களையும் விட்டுவைப்பதில்லை. உ.பி.யில் 90 சதவிகித சமூகத்தினர் கொண்ட தலைநகரம் ஒரு சதவிகிதத்தினரிடம் சென்றது எப்படி?’’ என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm