
செய்திகள் மலேசியா
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
கோலாலம்பூர்:
கண்ணதாசன் விழாவில் முன்னாள் போலிஸ் உயர் அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்.
கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டிலான கண்ணதாசன் விழா தலைநகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவரும், கண்ணதாசன் அரவாரியத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக 5 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
முன்னாள் போலிஸ் அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன் தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியம் விருது வழங்கப்பட்டது.
ஓவியர் லேனாவுக்கு சாதனை தலைவர் துன் சாமிவேலு விருது வழங்கப்பட்டது.
எல். இராமனுக்கு மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் விருதும் கமல சரஸ்வதிக்கு தமிழவேள் கோ. சாரங்கபாணி விருது வழங்கப்பட்டது.
விஜயவாகினி ராஜுக்கு இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது விருது வழங்கப்பட்டது.
டத்தோஸ்ரீ சரவணனுக்கு ஐவருக்கும் விருது வழங்கி சிறப்பித்தார்.
மேலும் கண்ணதாசன் விழாவில் இதுவரை 246 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 2:12 pm
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்
June 29, 2025, 11:37 am