
செய்திகள் மலேசியா
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் 60,000 உறுப்பினர்கள் 8% லாப ஈவை பெறுவார்கள்: டத்தோ சகாதேவன்
பெட்டாலிங்ஜெயா:
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் 60,000 உறுப்பினர்கள் 8% லாப ஈவை பெறுவார்கள்.
தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப. சகாதேவன் இதனை தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்திற்கு லாபகரமான ஆண்டாக அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈவு வழங்கப்படவுள்ளது.
இதற்காக 16 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வெள்ளி பங்குக்கு போனசாக 50 காசு வழங்கப்படுகிறது. உதாரணமாக ஆயிரம் வெள்ளி பங்குக்கு 500 வெள்ளி வழங்கப்படும்.
அங்கத்தினர்களின் நலன்களை காக்கும் பொருட்டு தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் பல சலுகைகளை வழங்கி வருகிறது.
குறிப்பாக அங்கத்தினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடனுதவி, துன் சம்பந்தன் உபகார சம்பளம், எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது
அதேபோல் வீட்டு கடனுதவி, அங்கத்தினர்களுக்கு மருத்துவ நிதி, மரண சகாய நிதி, இருதய அறுவை சிகிச்சை நிதி, கண் அறுவை சிகிச்சை நிதி, புற்றுநோய், சிறுநீரக சிகிச்சை நிதி, மூத்த அங்கத்தினர்களுக்கு உதவி நிதி என்று பல உதவிகள் வழங்கப்படுகிறது.
இது போன்ற திட்டங்கள் மூலம் 60,000 அங்கத்தினர்கள் நன்மை பயக்கும்.
தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் 57 ஆவது ஆண்டு கூட்டத்தில் பேசிய டத்தோ சகாதேவன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 3:41 pm
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
June 29, 2025, 2:12 pm
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்
June 29, 2025, 11:37 am